கொழும்பு, புறக்கோட்டை – மெனிங் மரக்கறி சந்தை வர்த்தக நடவடிக்கைகளுக்காக இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகப்பிரிவு அறிவித்துள்ளது. பொசன் பண்டிகையை முன்னிட்டு கடந்த இரு நாட்களாக மூடப்பட்ட மெனிங் சந்தை இன்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது.
இதேவேளை, கொரோனா தொற்று காராணமாக ஒவ்வாறு ஞாயிற்றுக்கிழமைகளிலும் சந்தை மூடப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திறக்கப்படும் என மெனிங் பொதுச் சந்தை வியாபார சங்கத்தின் தலைவர் நிமல் அத்தனாயக்க தெரிவித்தார்.