இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பது ஒரு குடும்ப ஆதிக்கம் கொண்ட கட்சியல்ல. தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் விட்டுச்சென்றதை தான் தொடரயிருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளர் மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார். வசந்தம் டீவியின் தீர்வு அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியல் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கட்சியின் அடுத்த தலைமைத்துவம் குறித்தும் இதன் போது கேள்வி எழுப்பப்பட்டது.
(அமரர் ஆறுமுகன் தொண்டமான் பெருந்தோட்ட மக்களுக்காக கண்ட 1000 ரூபா கனவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நிச்சயம் நிறைவேற்றும் எனவும் மத்திய மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.)