கொவிட் – 19 தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 17 கடற்படை வீரர்கள், சிகிச்சையின் பின்னர் பூரண குணமடைந்து நேற்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இக்கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறிய போதிலும், சுகாதார ஆலோசனைக்கு அமைய மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்கமைய, இவ்வாறு குணமடைந்த 17 கடற்படை வீரர்கள் உட்பட 443 கடற்படை வீரர்கள் கொவிட் – 19 தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.