த பினன்ஸ் கம்பனியின் வைப்பாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை முதல் நிதி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படுமென அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியிலுள்ள மக்கள் வங்கியின் 60 கிளைகள் ஊடாக பணம் மீள செலுத்தப்படவுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விபரங்களை கீழே வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
இலங்கை மத்திய வங்கி : 0112-398788, 0112-477261
மக்கள் வங்கி : 0112-481594, 0112-481320, 0112-481612, 0112-481703