சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு இன்றைய தினம் தமது 41 ஆவது வருட பூர்த்தியை கொண்டாடுகிறது. 1979ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் திகதி சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு அரச ஊடகமாக தமது பணியை ஆரம்பித்தது.
அன்று முதல் இன்று வரை பல மைல்கல்களை கடந்து ரசிகர்கள் மத்தியில் சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு என்றும் முதலிடம் பெற்று விளங்குகின்றது. உங்களது குடும்ப வானொலியாக ஊடக பயணத்தை ஆரம்பித்த ஐடிஎன் நிறுவனம் தொலைகாட்சிகளின் தாய் வீடாக கருதப்படுகிறது. ரசிகர்களின் உள்ளத்தில் நிரந்தரமாக இடம் பிடித்துள்ள சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு அன்று முதல் அதிவிசேட பயணத்தை ஆரம்பித்துள்ளது.
41ஆவது வருட பூர்த்தி நாள் பொசன் பௌர்ணமி தினமாக அமையப்பெற்றதால் வருடாந்த பிரித் பாராயணம் ஓதும் நிகழ்வை இம்முறை சிதுல்பவ்வ ரஜமகா விகாரையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கலந்து கொள்ளவுள்ளமை விசேட அம்சமாகும். ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு கடந்த தினங்களிலும் சர்வ மதவழிப்பாடுகள் இடம்பெற்றன.
தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு மதிப்பளித்து சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் ஆண்டு நிறைவு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.