சீனாவில் ஆரம்ப பாடசாலையொன்றில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 39 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 37 பேர் மாணவர்களென அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குவாங்சி தன்னாட்சி பிராந்தியத்திலுள்ள சுஸோ நகரில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாடசாலையில் பாதுகாவலராக பணியாற்றி 50 வயது நபரே தாக்குதலை நடத்தியுள்ளார்.
மாணவர்கள் பாடசாலைக்கு வருகைதந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும் தாக்குதலுக்கான காரணம் வெளியாகவில்லை. சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சீன பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.