நாட்டின் ஒரு சில பகுதிகளில் அவதானிக்கப்பட்டுள்ள வெட்டுக்கிளிகள் தொடர்பில் விவசாயத்திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. ஏதேனும் பகுதிகளில் உடலில் மஞ்சள் புள்ளிகளைக் கொண்ட வெட்டுக்கிளிகள் அவதானிக்கப்பட்டால் உடனடியாக 1920 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்தி தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.
வெட்டுக்கிளிகள் தாக்கம் தொடர்பில் விவசாயிகள் கூடுதல் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.