பொகவந்தலாவை – கெம்பியன் ஓல்டி தோட்டத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் உட்பட ஐவர், குளவி கொட்டுக்கு இலக்காகி, பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கெம்பியன் ஓல்டி தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு அருகில் இன்று பிற்பகல் இவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.