வவுனியா – கனகராயன் குளம் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.
வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொரி ஒன்றில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சம்பவம் தொடர்பில் கனகராயன் குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தள்ளனர்.