நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 683 ஆக அதிகரித்துள்ளது. நேற்றை தினத்தில் மாத்திரம் 40 பேர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் 32 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் 7 பேர் கடற்படை வீரர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். மற்றைய நபர் கடற்படையுடன் நெருங்கிப் பழகிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நோய் தொற்றிலிருந்து இதுவரை 823 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 849 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 84 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.
[ot-caption title=”” url=”https://www.itnnews.lk/wp-content/uploads/2020/06/2020-06-02_7.png”]