எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொதுப்போக்குவரத்து சேவை சாதாரணமுறையில் இடம்பெறவுள்ளது. அது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்பட்டதாக போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் சில தினங்களில் பொதுமக்களின் செயற்பாடுகளினூடாக கொவிட் 19 பரவல் நிலை தொடர்பில் ஆராயப்படும். அதனையடுத்து சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைகளை கருத்திற்கொண்டு, திங்கட்கிழமை முதல் பொதுப்போக்குவரத்து சேவையை சாதாரணமுறையில் நடத்திச்செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.