ரம்பொடை, வெவன்டன், தோட்ட பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
‘நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்துக்குட்பட்ட வெவன்டன் தோட்ட லயன் குடியிருப்பொன்றில் நேற்று இரவு 10.30 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. பொது மக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டமையையடுத்து, ஏனைய வீடுகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. 3 வீடுகள் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளன. சம்பவத்தை அறிந்த ஜீவன் தொண்டமான் அப்பகுதிக்குச் சென்று தீயிணை அணைப்பதற்கு அம்மக்களோடு இணைந்து செயற்பட்டதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை பெற்று கொடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மின்னொழுக்கு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. கொத்மலை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.’