மெக்சிகோவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் 237 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. புதிதாக இரண்டாயிரத்து 771 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய மெக்சிகோவில் மொத்தமாக 93 ஆயிரத்து 435 தொற்றாளர்கள் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறெனினும் மெக்சிகோவில் அதிகளவான உற்பத்தில் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.