மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வயல் பகுதியில் யானைக்கு அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் தும்பம்கேணி திக்கோடை பகுதியைச் சேர்ந்த 59 வயதான விவசாயி என தெரியவந்துள்ளது. சடலம் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் வெல்லாவளி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் பலி
படிக்க 0 நிமிடங்கள்