பொதுத் தேர்தலுக்காக தேர்தல்கள் ஆணைக்குழு குறித்த திகதியை சவாலுக்கு உட்படுத்தி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை , விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா, இல்லையா என்பது தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு, இன்று பிற்பகல் வெளியிடப்படவுள்ளது. குறித்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று பத்தாவது தினமாக தொடர்ந்து இடம்பெற்றது. ஐந்து நீதியரசர்களைக் கொண்ட குழு முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்றன.
இந்நிலையில் பொதுத்தேர்தலை நடத்துவது தொடர்பான சுகாதார ஆலோசனைகள் உள்ளிட்ட ஆலோசனைகளை இவ்வாரம் நிறைவடைவதற்கு முன்னர் வெளியிடுமாறு சட்டத்தரணி சார்பில் முன்னிலையாகியிருந்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்திகா தேமுனி டி சில்வாவுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதற்கமைய சுகாதார தரப்பினரால்; குறித்த ஆலோசனை வழிகாட்டல்கள் தயாரிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார்.