உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி பிரதேசத்தில் கைதான சஹ்ரானின் சகோதரி உட்பட 63 பேரையும் எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காணொளி மூலம் வழக்கு விசாரணை இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்தேக நபர்களில் சஹ்ரானின் சகோதரியின் கணவர், சியோன் தேவாலய தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய ஆசாத்தின் தாயாரும் உள்ளடங்குவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். 63 பேரையும் எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற ஏ.சி.ரிஸ்வான் காணொளி மூலம் உத்தரவு பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.