உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சாட்சியம் வழங்குவதற்காக மேலும் இருவருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. குற்ற விசாரணை பிரிவின் பிரதம பொலிஸ் பரிசோதகர் சமன் வீரசிங்க மற்றும் பம்பலப்பிட்டி பகுதியில் வசிக்கும் மொஹமட் ஜிப்ரி மொஹமட் ஹூசைன் ஆகியோருக்கே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக இடை நிறுத்தப்பட்டிருந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழவின் பணிகள் மீண்டும் கடந்த மாதம் 13ம் திகதி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.