கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நெடுந்தீவு – குறிகட்டுவான் படகுசேவைகள் நாளை முதல் வழமைக்குத் திரும்பவுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்தியசோதி அறிவித்துள்ளார்.
அதற்கமைய, வட – தாரகை காலை 8 மணிக்கு குறிகட்டுவானிலிருந்து நெடுந்தீவுக்கு புறப்பட்டு மாலை 4 மணிக்கு மீண்டும் குறிகட்டுவானை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏனைய படகு சேவைகளும் வழமைபோன்று சேவையில் ஈடுபடவுள்ளதாகவும் நெடுந்தீவு பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
இதேவேளை, வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக சமூக இடைவெளி பேணப்படுவதனால் மேலதிக படகு சேவையும் இடம்பெறவுள்ளதாகவும் நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்தியசோதி தெரிவித்தார்.