ஜீ 7 நாடுகளின் மாநாட்டை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளார். எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி மாநாடு நடைபெறவிருந்தது. இந்நிலையில் மேலும் பல நாடுகளுக்கும் இந்த காணொளி மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்க உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இதற்கமைய அவுஸ்ரேலியா, ரஷ்யா, தென்கொரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இந்த மாநாட்டில் பங்கேற்க தாம் அழைப்பு விடுக்க உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தற்போதுள்ள ஜீ 7 அமைப்பு மிகவும் காலாவதியான குழுவாக உள்ளதென அமெரிக்க ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை அமெரிக்காவுக்கு ஆதரவான நட்பு நாடுகளை ஜீ 7 குழுவில் இணைக்க ஜனாதிபதி ட்ரம்ப் விரும்புவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.