மேல்மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் போதைப்பொருள் சார்ந்த குற்றங்களில் ஈடுபட்ட 714 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 706 சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே அவர்கள் கைதாகியுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஹெரோயின் கஞ்சா மற்றும் மதுபான வர்த்தகம் தம்வசம் வைத்திருத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர்கள் கைதாகியுள்ளனர். இந்நிலையில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென பொலிசார் தெரிவித்துள்ளனர்.