வாக்காளர் இடாப்பு தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
2021 ம் ஆண்டு முதலாம் தரத்திற்கு பிள்ளைகளை இணைத்துக்கொள்வதற்கான கடிதத்தில் 5 வருடங்கள் வாக்களார் இடாப்பில் பதிவு செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்துகொள்ளமுடியுமென ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. எனினும் கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கென மக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்துக்கொள்வது முதற்கட்ட தேவையாக காணப்படுகிறது.
அதற்கமைய கிராம சேவை அதிகாரிகள் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் www.election.gov.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்து தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமென தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.