கல்வி அமைச்சின் மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளது. பாடசாலை மீள ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பின்பற்றப்பட வேண்டிய செயற்திட்டங்களை தயாரிப்பது இதன் நோக்கமாகும்.
மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் வைத்திய ஆலோசனைக்கமைய செயற்படுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. கல்விப் பொதுத்தராதர உயர்தர மற்றும் சாதாரண தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டிய விதம் தொடர்பிலும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அது தொடர்பான ஆலோசனை அறிக்கையொன்றும் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் பாடசாலை விவகாரங்கள் தொடர்பான மேலதிக செயலாளர் ஆர்.எம்.எம்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.