பாராளுமன்ற பொதுத்தேர்தலை ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான உயர் நீதிமன்றத்தில் எதிர்வரும் திங்கட் கிழமை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் குறித்த விசாரணைகள் இன்று 9வது நாளாகவும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.