உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றினால் இவ்வாண்டு இறுதியில் 8.6 கோடி சிறுவர்கள் வறுமைக்கு தள்ளப்படுவார்கள் என ஆய்வொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் மற்றும் சிறுவர்களை பாதுகாப்போம் என்ற அமைப்பு இணைந்து ஆய்வை முன்னெடுத்துள்ளது.
வைரஸ் தொற்றினால் உலக நாடுகளில் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது. குறித்த நிலை தொடர்ந்தால் இவ்வாண்டியின் இறுதியில் சிறுவர்கள் வறுமையை எதிர்கொள்வார்கள் எனவும் அது வழக்கத்தை காட்டிலும் 15 சதவீத அதிகரிப்பு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்கள் மீட்கப்படா விட்டால் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் சிறுவர்களின் எண்ணிக்கை 62.7 கோடியாக அதிகரிக்குமென எச்சரிக்கைப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.