கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு வழங்கப்பட்டுள்ள வைத்திய ஆலோசனைகளை பின்பற்றாத 140 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக சுற்றிவளைப்பு எடுக்கப்பட்டுள்ளது. முககவசம் அணியாது இருந்த 115 பேர் இதன்போது கைதாகியுள்ளனர்.
25 பேர் நீர்கொழும்பு பகுதியிலும் 24 பேர் வட கொழும்பு பகுதியிலும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயம் தெரிவித்துள்ளது. சமூக இடைவெளி பேணலை புறக்கணித்த 25 பேர் நீர்கொழும்பு மற்றும் களுத்துறை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.