சகல துறைகளும் உள்ளடங்கும் வகையில் 25 மாவட்டங்களுக்கு சுகாதார பிரிவின் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன. குறித்த வழிகாட்டல்களுக்கு அமைய செயற்படுவது முக்கியமென சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஒத்துழைப்பு தொடர்ந்தும் வழங்கப்படுமென பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் மஹிந்த பலாசூரிய தெரிவித்துள்ளார். ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின் அது தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வு பெற்றுக்கொள்ள முடியுமென பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் மஹிந்த பலாசூரிய தெரிவித்துள்ளார்.