தற்போது முகங்கொடுத்துள்ள சிரமங்கள் எதுவாக இருந்தாலும் மக்களே முதன்மையாளர்கள் என்ற கொள்கையில் மாற்றமில்லையென ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொவிட் -19 மற்றும் அதற்கு பின்னரான காலங்களில் அபிவிருத்திக்கான நிதியுதவி குறித்த உயர்மட்ட வீடியோ மாநாட்டில் பங்கேற்றபோதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷ மாநாட்டில் பங்கேற்றார். 49 நாடுகள் மற்றும் 8 சர்வதேச அமைப்புக்களின் பிரதானிகள் இதில் பங்கேற்றிருந்தனர்.
நிபந்தனையற்ற, அபிவிருத்தி பங்காளர்களாக முன்னோக்கி செல்லவேண்டியதென உலகின் முன்னணி நிதி குழுக்கள் மற்றும் தலைவர்களின் பொறுப்புக்கள் என ஜனாதிபதி தெரிவித்தார். உலகளாவிய வர்த்தகம், சுற்றுலா, முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை ஸ்தம்பிதமடைந்துள்ளன. தொற்றுநோய் நிலைமையானது நிலையான வர்த்தகங்கள் மற்றும் பொருளாதாரங்களை திடீரென சீர்குலைத்து, நிலையற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது. உண்மையான பொருளாதாரம் மேலும் வருமானம் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதில்லை என்பதால் அரச வருமான பற்றாக்குறையை முறையாகக் குறைத்து வரும் நாடுகள் பின்னடைவை சந்தித்துள்ளன. வீழ்ச்சியடைந்து வரும் போக்கில் இருந்த கடன் தலைகீழ் மாற்றத்தைக் கண்டுள்ளது. செயற்படாத சொத்துக்கள் உயர்ந்து திரவத்தன்மை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால் வங்கித்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது.
முழு சேமிப்பு – முதலீட்டு சமன்பாடு சரிவடைந்துள்ள காரணத்தினால் ‘அபிவிருத்திக்கு நிதியளித்தல்’ என்பது உலகப் பொருளாதாரத்திற்கு பொருத்தமான தலைப்பாக உள்ளது. தொழிலாளர் வருமானம், ஏற்றுமதி சார்ந்த வருமானம், சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புபட்ட சேவைகள் மூலம் இலங்கையின் பிரதான பரிமாற்ற வழிகள் எமது பொருளாதாரத்தை பாதித்துள்ளன. வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார இழப்பு பாரியது.
நாம் மிகவும் மதிக்கும் ஒரே சொத்து மனித அபிவிருத்தி என்பதால் எத்தகைய சிரமங்களை நாம் எதிர்கொண்டாலும் ‘மக்களே முதன்மையானவர்கள’ என்ற கொள்கையை கைவிட முடியாதென ஜனாதிபதி குறிப்பிட்டார். இந்நிலையில பாரிய இருதரப்பு மற்றும் பல்தரப்பு கடன் வழங்குநர்களின் உத்தியோகபூர்வ கடன் மற்றும் நடுத்தர கால அவசர வரவுசெலவுத்திட்ட உதவி கடன்களின் கடப்பாடுகளை பூர்த்தி செய்வதற்கும் வர்த்தக மற்றும் கொடுப்பனவு முறைகளை தளர்த்துவதற்கும் பெரும் பொருளாதார இடத்தை வழங்குகிறது. அத்துடள் பொருளாதார வளர்ச்சியையும் முதலீடுகளையும் மீள் ஊக்குவிக்க தனியார் துறை கடன் வழங்குநர்களிடையே நம்பிக்கையையும் மீட்டெடுக்குமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அரச நிதி வசதிகளினூடாக அபிவிருத்தியடைந்துவரும் மற்றும் மத்திய வருமானம் பெறும் நாடுகளுக்கு உதவும் வகையில் இணக்கப்பாடு எட்டப்படவேண்டுமென ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.