பொதுத் தேர்தல் நடத்தப்படும் தினத்தை சவாலுக்கு உட்படுத்தி உச்சநீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மனுக்களை மேலும் ஆராயும் செயற்பாடுகள் இன்று முற்பகல் ஆரம்பமாகின. ஐவரடங்கிய நீதியரசர்கள் குழுமுன்னிலையில் மனுக்கள் இன்றைய தினம் 8 வது நாளாக ஆராயப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுத்தல் மற்றும் ஒழித்தல் தொடர்பில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் 3 அறிக்கைகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன. சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிஷிட்டர் ஜெனரல் இந்திக்கா தேவமுனி டி சில்வா நேற்று நீதிமன்றில் வாதங்களை முன்வைத்தார். மனுத்தாக்கல் செய்துள்ள பேராசிரியர் பண்டுல எதகம சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா ஆஜரானார். ஏனைய மனுக்கள் சார்பில் ஆஜராகியுள்ள சட்டத்தரணிகள் இன்று வாதங்களை முன்வைக்கவுள்ளனர்.