தனிநபர் இடைவெளி உள்ளிட்ட சுகாதார பரிந்துரைகளை பின்பற்றாத 357 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் அதிகமானோர் களுத்துறை, பணந்துறை, கொழும்பு மற்றும் நீர்கொழும்பு ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களென பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹான தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் தமது நாளாந்த பணிகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளனர். இதன்போது, சுகாதார ஆலோசணைகளை கடைப்பிடிப்பது கட்டாயமென பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹான குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சமூகவிலகலை கடைப்பிடிப்பது மற்றும் சுகாதார ஆலோசனைகளை உரிய முறையில் பின்பற்றுவது குறித்து விசேட தேடுதல் நடவடிக்கையும் பொலிஸாரால் நடைமுறைப்பட்டுள்ளமை குறிப்பித்தக்கது.