எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறுவதை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் நாளை காலை 10 மணிக்கு மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் குறித்த விசாரணைகள் இன்று 6வது நாளாகவும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.