ஹொங்கொங்கில் பயங்கரவாத சம்பங்களை தடுப்பதற்கு புதிய பாதுகாப்பு சட்டம் தேவைப்படுவதாக பிராந்தியத்தின் பாதுகாப்பு பிரதானி ஜோன் லீ குறிப்பிட்டுள்ளார்.
வன்முறை எனும் நிழலால் ஹொங்கொங் மறைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த சில மாதங்களாக ஹொங்கொங்கில் வன்முறைகள் எதுவும் பதிவாகவில்லை. எனினும் கடந்த வார இறுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது வன்முறைகள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஹொங்கொங்கின் பாதுகாப்பு குறித்து சீன அரசாங்கம் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஆர்ப்பாட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.