சமூகத்தில் கொவிட் 19 பரவக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றதா என்பது குறித்து ஆராய பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டில் தற்போது பின்பற்றப்படும் சுகாதார நடைமுறைகள் தொடர்ந்தும் பின்பற்றப்பட வேண்டுமா என்பது குறித்தும் ஆராயப்படவுள்ளது.
இந்நிலையில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள், சுகாதார நடைமுறைகளுக்கமைய வர்த்தக நிலையங்களை திறந்தவர்கள் மற்றும் நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்து தொடர்ந்தும் கண்காணிக்கப்படுமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. எதிர்காலத்தில் கொவிட் 19 தொற்று நாட்டிற்குள் பரவுவதை தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணிகள் இடம்பெறவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.