ரஷ்யாவில் தங்கியிருந்த 181 மாணவர்கள் இன்று அதிகாலை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.
கொரோனா வைரஸ் காரணமாக இந்த மாணவர்கள் இலங்கைக்கு திரும்ப முடியாமல் இருந்தனர். வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்கள் அத்துடன் மாணவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் 181 பேர் கொண்ட குழு இன்று அதிகாலை நாட்டிற்கு வந்தது.
அவர்கள் அனைவரும் விமானநிலையத்திற்குள் நுழைவதற்கு முன்னர், தொற்று நீக்கும் செயற்பாட்டில் ஈடுப்படுத்தப்பட்டதோடு, உடல் வெப்பநிலையை பரிசோதிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனையடுத்து, அவர்கள் இராணுவத்தினரால் தயார் நிலையில், வைக்கப்பட்டிருந்த விசேட பஸ் வண்டி மூலம் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.