இரத்தினபுரி மாவட்டத்தில் சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 30 குடும்பங்களைச் சேர்ந்த 122 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று காலை வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு 6 இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.
பலாங்கொடை, பெல்மடுல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 4 முகாம்களிலும் அயகம, இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள இரு முகாம்களிலும் அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். குறித்த மாவட்டத்தில், 19 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் மண்சரிவு, வெள்ளம், பலத்த காற்று உள்ளிட்ட அனர்த்தங்கள் காரணமாக, 5 ஆயிரத்து 124 குடும்பங்களைச் சேர்ந்த 19 ஆயிரத்து 337 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் அனர்த்தங்களில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரத்து 954 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.