இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 6 ஆயிரத்து 767 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. அங்கு, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. எனினும், நாடு முழுவதும் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, இந்தியாவில் வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 423 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் தொற்றினால் இந்தியாவில் 147 பேர் பலியாகியுள்ளனர். அதற்கமைய, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 868 ஆக அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.