ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருக்கும் காலப்பகுதியில் அதைமீறும் வகையில் செயற்படவேண்டாமென பொலிஸார் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். பொலிஸ் ரோந்து பணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
900 வீதி தடைகள் ஏற்படுத்தப்படவுள்ளதாவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். இன்றும் நாளையும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தாலும் அத்தியாவசிய சேவைகள் முன்னெடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்கு வெளியில் செல்வதாயின் தகுந்த அனுமதி பத்திரம் அவசியமென பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.