யாழில் இருந்து கதிர்காமத்தை நோக்கிய பாதை யாத்திரையை ஆரம்பிக்க அனுமதி கிடைத்துள்ளதாக யாத்திரைக்கு தலைமை தாங்கும் சி.ஜெயசங்கரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 30ம் திகதி தொண்டமனாறு செல்வச்சந்நிதியில் இருந்து, மோகனதாஸிடம் வேல் பெற்று, கதிர்காமத்தை நோக்கி யாத்திரை ஆரம்பமாகவுள்ளது. 46 நாட்கள் தொடர்ந்து கால் நடையாக கதிர்காம கந்தனின் கொடியேற்ற தினத்தன்று அங்கு சென்றடையவுள்ளதாக சி.ஜெயசங்கரன் குறிப்பிட்டுள்ளார். கொரோனோ தொற்று அபாயம் காரணமாக உரிய சுகாதார முறைகளை பேணி யாத்திரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் யாத்திரை செல்லும் அனைவரும் 2 மீற்றர் இடைவெளியை பின்பற்ற வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.