லெபனானில் கொவிட் – 19 தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இதனால், அமுலில் உள்ள முடக்கநிலையை மேலும் இரு வாரங்களுக்கு நீடிக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா வைரஸ் பரவல் முடக்கநிலை எதிர்வரும் ஜூன் மாதம் 7ம் திகதி வரை நீடிக்கப்படவுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் லெபனானில் அமுலில் இருந்த முடக்கநிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனால், நோய் பரவல் அதிகரித்தது.
இந்நிலையில், மீண்டும் முடக்கநிலை நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பதிவானதன் பின்னர், 5வது முறையாகவும் லெபனான் அரசாங்கம் முடக்கநிலையை நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.