உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலுக்கு இலக்கான ஹோட்டல்களின் அதிகரிகள் சிலர் சாட்சியம் வழங்குவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் அவர்களிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் எ.ஜீ.வை. சுவர்ண கீர்த்திசிங்க நேற்றைய தினம் ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகி சாட்சியம் வழங்கினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகள் அனைத்தும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என இதன்போது தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.