பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 3 மாதங்கள் கடந்தும் பாராளுமன்றத்தை கூட்டாமையினால் அடிப்படை மனித உரிமை மீறப்பட்டிருப்பதாக அறிவிக்க வேண்டுமென கோரி ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
மார்ச் பாராளுமன்றத்தை கலைத்து மார்ச் மாதம் இரண்டாம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யகோரி இம்மனுவின் மூலம் அகில விராஜ்காரியவசம் கேட்டுக்கொண்டுள்ளார். எட்டாவது பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் 9வது பாராளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான பொது தேர்தலை ஜூன் மாதம் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்திருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த தினமானது பாராளுமன்றத்தை கலைத்த நாள் முதல் 3 மாதத்தின் பின்னரான ஒரு தினமென்பதால் தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானம் சட்டவிரோதமானது என மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.