கொழும்பு – மாளிகாவத்தை பகுதியில் சன நெரிசலில் சிக்குண்டு 3 பெண்கள் உயிரிழந்ததை தொடர்ந்து கொழும்பு ஜும்மா மஸ்ஜித் சாலையின் நுழைவு மற்றும் வெளியேற்றம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தனிப்பட்ட ரீதியில் வழங்கப்பட்ட நிவாரணங்களை பெற்றுக்கொள்ள சென்ற நிலையில், குறித்த 3 பெண்களும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் காயமடை 8 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.