தென்கொரியாவில் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான பல்வேறு கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் வகுப்பறைகள் சிற்றுண்டிச்சாலைகள் என்பவற்றில் ஒருவருக்கு ஒருவர் இடைவெளியை பேணும் வகையில் பிளாஸ்டிக் திரைகள் போடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வைரஸ் தொற்றால் தென் கொரியாவில் 18 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 339 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.