தமிழ், தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக கலக்கி வரும் நடிகை தமன்னா நடிகர்களை போல் நடிகைகளும் ஏன் அதிக சம்பளம் வாங்கக்கூடாதென தமன்னா கேள்வி எழுப்பியுள்ளார்.
தெலுங்கில் ரவிதேஜா படத்தில் நடிக்க தமன்னாவை அணுகினர். குறித்த படத்தில் நடிக்க அவர் அதிக சம்பளம் கேட்டதாகவும், குறித்த தொகையை கொடுக்க தயாரிப்பு நிறுவனம் மறுத்துவிட்டதால் தமன்னா அப்படத்திலிருந்து விலகியதாகவும் சினிமா வட்டாரத்தில் தகவல் பரவிவுள்ளது.
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமன்னா, ‘ரவிதேஜாவும் நானும் நல்ல நண்பர்கள். அவரது படத்தை மறுக்க வேண்டிய அவசியம் இல்லை. என்னை பற்றி போலியான தகவல்கள் பரவி உள்ளன. குறித்த படத்தில் நடிப்பது குறித்து எனது மேலாளரிடம் படக்குழுவினர் பேசினர். எனினும் கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தால் பேச்சுவார்த்தை இடைநிறுத்தப்பட்டது. சம்பளம் நடிகர்களின் தனிப்பட்ட விடயம். குறிப்பிட்ட சம்பளத்தை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம். நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டுமென பேசுவது ஏற்புடையது அல்ல.’ எனத் தெரிவித்துள்ளார்.