எரிபொருளின் விலையை அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லையென போவதில்லையென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியன் ஒயில் நிறுவனம் ஒக்டேன் 92 ரக எரிபொருளின் விலையை லீற்றருக்கு 5 ரூபாவால் அதிகரித்துள்ளது. இந்தியன் ஒயில் நிறுவனம் எரிபொருளின் விலையை அதிகரிக்க எடுத்த தீர்மானம் குறித்த நிறுவனத்துடன் மாத்திரம் தொடர்புபட்டது. இதற்கும் அரசாங்கத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லையென அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில், அரசாங்கத்தை குற்றம்சாட்டும் வகையில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லையென அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.