கொவிட் 19 வைரஸை ஒழிப்பதற்காக தொழில்நுட்ப அறிவை பயன்படுத்துவதில் இலங்கை ஜனாதிபதி முன்னிலையில் இருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் போக்லே தெரிவித்துள்ளார். இலங்கையுடன் நட்புறவை மேலும் உறுதிப்படுத்த இந்திய அரசாங்கம் எதிர்பார்ப்பதாக இந்தியாவின் வியோன் தொலைகாட்சிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் தெரிவித்தார்.
கேள்வி : இந்திய அரசாங்கம் இலங்கையுடன் இவ்விடயம் தொடர்பில் எவ்வாறு செயற்பட்டது? அத்துடன் வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பில் கூறுங்கள்.
பதில் : இந்தியாவும் இலங்கையும் சிறந்த நட்பு நாடுகள். ஆகவே வரலாறு தொடக்கம் உலகளாவிய ரீதியில் பௌத்தமதம் மற்றும் ஆன்மீக நட்புறவு ஊடாக சிறந்த தொடர்புகள் இரு நாடுகளுக்கு இடையிலும் கட்டியெழுப்பப்பட்டன. இவை அனைத்தும் காரணமாக இரு நாடுகளும் பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் உதவி வருவது இயற்கையாகும். அபிவிருத்தி துறை மட்டுமல்லாமல் பல்வேறு பிரச்சினைக்குரிய காலக்கட்டங்களிலும் நாங்கள் பரஸ்பர உதவிகளை செய்து கொண்டோம். நாம் மிகவும் அதிஷ்டசாலிகள். இருதரப்பு உதவிகளை அதிகரிக்ககூடிய தலைவர்கள் இரு நாடுகளிலும் இருப்பது தொடர்பில் மகிழ்ச்சியடைகிறேன். இலங்கை தலைமைத்துவத்துடன் இணைந்து செயற்பட்டு கொவிட் 19 இற்கு மத்தியில் ஏற்பட்டுள்ள பொருளாதார இலக்கை வெற்றிக்கொள்வதே எனது நோக்கமாகும்.
கேள்வி : எதிர்காலத்தில் இராஜாங்க உறவுகளை வீடியோ தொழில்நுட்பம் மற்றும் இணையத்தளத்தின் ஊடாக முன்னெடுப்பது தொடர்பில் தங்களது கருத்து என்ன?
பதில் : அண்மையில் இடம்பெற்ற வீடியோ கலந்துரையாடலை ஏற்பாடு செய்வதில் இலங்கை ஜனாதிபதி மிகவும் பாராட்டத்தக்க வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்பதை நான் தெரிவிக்க விரும்புகிறேன். அதன்மூலம் சவால்களை வெற்றிக்கொள்வதில் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென அவர் சுட்டிக்காட்டினார். இவை அனைத்தின் மூலம் சவால்களை வெற்றிக்கொள்வதே எமது இலக்காகும்.