இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 2 ஆயிரத்து 709 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த காலப்பகுதியில் 946 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 20ம் திகதி மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில், ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 59 ஆயிரத்து 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த காலப்பகுதிக்குள் 16 ஆயிரத்து 436 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்களில் 15 ஆயிரத்து 695 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.