விமான நிலையத்தில் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கான 3 மாத வாடகையை அறவிடமால் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொவிட்19 வைரஸ் தொற்று காரணமாக விமானநிலையம் மூடப்பட்டது.
இதனால், தீர்வை வரி வர்த்தக நிலையங்கள் உட்பட விமானநிலையத்தில் சேவைகள் வழங்கும் நிறுவனங்களுக்கான 3 மாதகால வாடகை ரத்து செய்யப்பட்டள்ளது. அமைச்சர் பிரசன்ன ரனதுங்கவின் ஆலோசனைக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விமானநிலைய மற்றும் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.