கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையை நடத்தும் தினம் தொடர்பில், இதுவரை தீர்மானிக்கப்படவில்லையென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டமையால் கற்றல் செயற்பாடுகள் தாமதமடைந்துள்ளன. இதனால், பாடத்திட்டங்களை உள்ளடக்குவதற்கு குறிப்பிட்ட காலம் வழங்கப்பட்டதன் பின்னர், பரீட்சை நடத்தப்படுமென பரீட்சைகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டு மற்றும் விசாரணை பிரிவின் ஆணையாளர் எச்.ஜே.எம்.சி.அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளனார்.
இதேவேளை, பாடசாலையை ஆரம்பிப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் மாகாண மட்டத்தில் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாகவும் கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.