உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் சுமார் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. வைரஸ் பரவ ஆரம்பித்தது முதல் அங்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொதுப்போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதுடன், உள்நாட்டு, சர்வதேச விமானப்போக்குவரத்தையும் அந்நாடு முடக்கியது. இந்த நிலையில் கொரோனா பரவல் கட்டுக்குள் வராத நிலையிலும், ஊரடங்கை படிப்படியாக தளர்த்தப்போவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது.
அடிப்படையில், உள்நாட்டு விமான சேவையை பகுதியளவில் மேற்கொள்ள பாகிஸ்தான் விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. கராச்சி, லாகூர், இஸ்லாமாபாத், குவெட்டா, பெஷாவார் ஆகிய 5 முக்கிய நகரங்களில் இருந்து உள்நாட்டு விமானங்கள் மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.