சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பினால் நடைமுறைப்படுத்தப்படும் மனிதநேய செயற்றிட்டத்தின் மூலம் தொடர்ந்தும் பலர் நன்மையடைந்து வருகின்றனர்.
சுயாதீன தொலைகாட்சி ஊடக வலையமைப்பின் மனிதநேய திட்டத்தின் மூலம் பல்வேறு தரப்பினருக்கும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்துக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இரண்டு இலட்சம் ரூபாவை இன்று நன்கொடையாக வழங்கியது. 306 சி 01 சிங்க சமாசம் 3 இலட்சம் ரூபாவையும் வழங்கியுள்ளது. சுயாதீன தொலைகாட்சி ஊடக வலையமைப்பின் தலைவர் சுதத் ரோஹன இப்பொருட்களை ஏற்று கொண்டார். 306 சி 01 சிங்க சமாசத்தின் தலைவர் லயன் மஹிந்த பெரேராவும் இதில் கலந்து கொண்டார்.
மனிதநேய நடவடிக்கையில் இணைந்து கொண்டுள்ள 306 ஏ 01 மாவட்ட சிங்க சமாசம் நாகொட பொது வைத்தியசாலைக்கு பாதுகாப்பு அங்கிகளையும் முக கவசங்களையும் வழங்கியுள்ளது. இவ்வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் தமர கலுபோவிலவிடம் இப்பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன.
இதேவேளை ஐரீஎன் மனிதநேய திட்டத்துக்கு இணைவாக பாணந்துரை ஆதார வைத்தியசாலை ஊழியர்கள் ஒருதொகை பாதுகாப்பு அங்கிகளையும் முக கவசங்களையும் வழங்கினர். 306 ஏ 01 சிங்க சமாசத்தின் தலைவர் லயன் லான் பெர்ணான்டோ இதனை பாணந்துரை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் இந்திராணி கொடகந்தவிடம் இதனை ஒப்படைத்தார்.